இது என் வானம்!
சென்ஸார் இல்லாத சித்திரங்களும், கதைகளும், என் சிந்தனைகளும்!
Friday, March 8, 2024
உன்னைப்போல் செல்வனை நான்...
Monday, March 4, 2024
எனக்காகப் பிறந்தவளை...
எனக்காகப் பிறந்தவளை
கண்டு பிடித்தேன்.
அவள் கண்ணசைவில்
ஒருகோடி கவிதை படித்தேன்.
என் பாதி எங்கே என்று
தேடி அலைந்தேன்.
அவளைப் பார்த்த பின்புதான்
நான் முழுமை அடைந்தேன்.
ஈருயிர் ஒன்றாய் - இனி
அவள்தான் என் தாய்.
வேப்பம்பூ உதிர்கின்ற
என் வீட்டு முற்றம் - அவள்
போடும் கோலத்தால்
அழகாய் மாறும்.
விண்மீன்கள் வந்து போகும்
மொட்டைமாடி - அவள்
கொலுசின் ஓசையினால்
சொர்க்கம் ஆகும்.
காற்று வந்து கதை பேசும்
கொடிக்கயிற்றில் - அவள்
புடவை அன்றாடம்
கூட்டம் போடும்.
காத்திருப்பாள் ஒருத்தி
என்ற நினைவு வந்து,
மனம் கடிகார முள்மீது
ஆட்டம் போடும்.
பாதரசம் உதிர்கின்ற
கண்ணாடி மேல்,
புதிதாக பொட்டு வந்து
ஒட்டிக் கொள்ளும்.
பழைய ரசம் - அவள்
கையால் பறிமாறினால்,
பழரசமாய் இனிக்கிறதென
பொய்கள் சொல்லும்.
பூக்கடைக்குப் போகாத
கால்கள் இரண்டும்
புதுப்பழக்கம் பார் - என்று
திட்டிச் செல்லும்.
ஆண்களுக்கும் வெட்கம்
வரும் தருணம் உண்டு - என்று
ஓர் சிரிப்பு வந்து காட்டிச் செல்லும்.
#நா.முத்துக்குமார்
Sunday, March 3, 2024
அணையா விளக்காட்டம்...
அணையா விளக்காட்டம்
அழகே நீ விழிச்சிருக்க,
துணையா தாயிருக்கா
தொந்தரவு வெளங்காம...
மேக இமை மூடியதால்
மேல் நிலவு தூங்கிருச்சு,
மோகமெனை வாட்டுதடி
மோகனமே தூங்காயோ...
உன் பசியை தீர்த்துக்கிட்டு
உறங்காம நீயிருந்தா,
என் பசிக்கு விருந்தேது
என்ன சொல்லி வருந்துவது...
கண்ணுறங்கு கண்மணியே
காலையிலே வெள்ளி வரும்,
இன்னும் நீ விழிச்சிருந்தா
இரவுக்கே கோபம் வரும்...
செல்லக்கிளி நீயுறங்கி
செண்பகத்த அனுப்பி வையி,
உள்ளபடி சொன்னா
உனக்கு ஒரு சொந்தம் வரும்.
************************************
தவமாய் தவமிருந்து
தரை மெழுகி கோலமிட்டு
வரமாய் பெற்ற மவன்
வாளெடுத்து வாராயோ!
கரடி உறங்கும் வனம்
காட்டானை தூங்கும் வனம்
கண்ணே நீ கடப்பாயோ
காடெல்லாம் சாய்ப்பாயோ!
சூரிய நதியோரம்
சொர்க்கமின்னும் போகையில
சுருட்டிப் பிடித்திழுக்கும்
சோம்பேறி முதலைகளாம்!
காடை கடக்கையில
கால் நோக நடக்கையில
கொத்தி விஷம் கொடுக்கும்
குணமில்லா வவ்வாலாம்!
மலை மேலே பசு மேய
மகிழம்பூ பாய் விரிக்க
மழை தங்கா பாறையிலே
மேல் உச்சி போவாயோ!
காக்கை விதை போட்டு
கால் பரப்பி வளர்ந்த மரம்
நீக்கி பார்ப்பாயோ
நீண்ட வழி காண்பாயோ!
கருவுக்குள் உரு போல
கண் மூடித் தவழ்வாயோ
கட்டை விரல் நனைய
காலாலே நடப்பாயோ!
புத்தி சொன்ன மகன்
புடம் போட்ட தங்க மகன்
புவியெங்கும் புகழ் பாடும்
பொன்னான புத்தமகன்!
ரெட்டைக்குகை புரிந்து
றெக்கை அடிப்பாயோ
ராஜன் தலை சுமந்த
ரத்தினத்தை காண்பாயோ!
தவமாய் தவமிருந்து
தரை மெழுகி கோலமிட்டு
வரமாய் பெற்ற மவன்
வாளெடுத்து வாராயோ!
*************************************
உளி பொளிந்து
சிதைப்பதால்தான்
சிற்பம் சிறக்கிறது.
இலையுதிர்த்த
மரங்களில்தான்
வசந்தம் பிறக்கிறது.
இழந்து பெறும்
வாழ்க்கையிலும்
ஏதோ சுகமொன்று
இருக்கிறது.
*************************************
நயனம் நிமிர்ந்து நீ
நோக்கிடும் திசைகளில்
பயணம் உன்னுடன்
பாதைகள் எங்கிலும்
என்றவன் சென்றபின்
என்னவோர் வாழ்வது?
பாதையில் நடக்கையில்
பாதியில் மழைவர
நாதமாய் நடந்தவன்
நிழலென மறையலாம்.
சென்றதை நினைவினில்
தேக்கியே தவித்திடல்
என்னதான் பயன் தரும்
எடுத்தெறி இன்றுடன்.
என் குடை விரித்து நான்
எங்குமே துணைவர
என்னுடன் தொடங்கிடேன்
இன்னுமோர் பயணமே!
************************************
#இளவயதில் மாத நாவல்களில் வாசித்து மனதில் பதிந்து விட்ட வரிகள்.
Friday, March 1, 2024
ஆரோ! ஆரிரரோ!
Tuesday, March 28, 2023
Grimm's #14 இரவுக்காவலன்!
Friday, January 20, 2023
17,அச்ச மாளிகை!
Tuesday, January 17, 2023
16,ஆவியின் சாபம்!
Sunday, January 8, 2023
14,மரணத்தின் வாசலில்...
Tuesday, January 3, 2023
13,இரத்தத் தாகம்.
உண்மையில் இரத்தக் காட்டேரிகள் நம்முடன்தான் வாழ்கின்றனர். பொதுமக்களின் இரத்தத்தை உரிஞ்சும் நேர்மையற்ற அரசியல்வாதிகளும், அரசு ஊழியர்களும், சுயநலவாதிகளும் இரத்த வெறி பிடித்த காட்டேரிகளே.